![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/06/2a87a282-83b1-4689-b9fe-1701746fcbe8.-.jpeg)
அமெரிக்காவைச் சேர்ந்தவர் எட்வர்ட் காங். 20 வயதான இவர் ஆன்லைன் கேம் விளையாடிய போது மற்றொரு ஆன்லைன் கெமர் ஒருவரோடு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் அந்த நபரை கொலை செய்ய திட்டமிட்டு ஆயிரம் மைல்களை கடந்து சென்று அவரை சுத்தியலால் அடித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
அதாவது ஆன்லைனில் பழகிய தன்னுடைய நண்பனை நேரில் சந்திப்பதாக அமெரிக்காவிலிருந்து ப்ளோரிடாவிற்கு செல்வதாக இவர் தன்னுடைய தாயிடம் கூறிவிட்டு சென்றார் என்று கூறப்படுகிறது. மேலும் தாக்கப்பட்ட நபர் ஆன்லைனில் மிகவும் மோசமான நபராக இருந்ததாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் காங்.