நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொண்ட நிலையில் இறுதி போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் முன்னேறியது. நடப்பு தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காத இந்திய அணி இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவில் 17 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பையை வென்றது. இந்த போட்டி முடிவடைந்த பிறகு கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஆல் ரவுண்டர் ஜடேஜாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஜடேஜா ஓய்வு பெற்றுள்ளதாக அறிவித்த நிலையில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள x பதிவில், நீங்கள் ஆல் ரவுண்டராக சிறப்பாக விளையாடினீர்கள். உங்களுடைய ஸ்டைலான ஆட்டம், பீல்டிங், ஸ்பின் ஆகியவற்றை கிரிக்கெட் ரசிகர்கள் போற்றுகிறார்கள். டி20 போட்டியில் சிறப்பாக விளையாடியதற்கு நன்றி. உங்களுடைய முயற்சிகள் தொடர்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.