கல்கி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கல்கி திரைப்படத்தின் இயக்குனர் நாக் அஸ்வினுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரஜினி வெளியிட்டுள்ள பதிவில், கல்கி திரைப்படத்தை பார்த்தேன், ஆஹா! என்ன ஒரு காவியம்! இயக்குனர் நாக் அஸ்வின் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டார். எனது அன்பு நண்பர் அஸ்வின் தத், அமிதாபட்ஷன், கமலஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் பட குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இரண்டாவது பாகத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று ரஜினி பதிவிட்டுள்ளார்.