
கலை பண்பாட்டு துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் மற்றும் கரூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் செயல்படும் இசை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.400, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் இசை கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் 500 ரூபாய் வழங்கப்படும். மேலும் கூடுதல் விவரங்களை அறிய www.artandculture.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.