மிழ் சினிமாவில் என்னவளே என்ற படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சினேகா. இந்த படத்திற்கு பிறகு விஜய், கமல், சூர்யா, தனுஷ், சிம்பு என பல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.

புன்னகை அரசி, சிரிப்பழகி என்றும் ரசிகர்கள் சினேகாவை கொண்டாடினர், இவர் கடந்த 2012 ஆம் வருடம் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், இந்த நிலையில் சினேகா பிரசன்னா தம்பதியினர் சர்ச்சையில் சிக்கி உள்ளனர். அதாவது பங்குனி பிரதேசத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்றார்கள். அங்கு கிரிவல பாதை நடைப்பயணம் மேற்கொண்டார்கள். மனம் உருகி தேங்காய் உடைத்து வேண்டிக்கொண்டு அவர்கள் செருப்போடு நடந்து சென்றது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இது பெரும் பாவம் என்று ஒரு தரப்பினர் கூறிவரும் நிலையில் மற்றொருத்தரப்பினர் அவருக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.