
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே மீன்கரை பகுதியில் வாலிபர்கள் போதை ஊசி பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மணி சலீம் நந்தகுமார் இப்ராஹிம் முகமது அலி உள்ளிட்ட 8 பேர் போதை ஊசி பயன்படுத்தியது உறுதியானது. இதனால் போதை ஊசி பயன்படுத்திய 8 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் போதை ஊசிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.