இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது அதிகரித்துவிட்டது. அதிலும் குறிப்பாக UPI செயலிகளான கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட செயலிகளை மக்கள் அதிக அளவு பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் பணப்பரிவர்த்தனைக்கு யுபிஐ அதிகம் பயன்படுத்துவதை பயன்படுத்தி மோசடி நபர்கள் புதுப்புது வழிகளில் கைவரிசை காட்டி வருகிறார்கள்.

உங்களுக்கு பணம் அனுப்புகிறோம். Pin எண் சொல்லுங்கள் எனக் கேட்டு பெற்று வங்கி கணக்கில் பணத்தை திருடி விடுகின்றனர். பொதுவாக பணத்தை அனுப்ப மட்டுமே pin நம்பர் பதிவிட வேண்டும். பணத்தைப் பெற அதை தெரிவிக்க வேண்டியதில்லை. இது தெரிந்திருந்தாலே நாம் மோசடியில் இருந்து தப்பிக்க முடியும்.