தமிழகத்தில் வட்டச் செயலாளராக இருப்பதற்கு கூட பாஜக தலைவர் அண்ணாமலை தகுதி இல்லாதவர். அவரை எப்படி தமிழகத்தின் பாஜக தலைவராக நியமித்தார்கள் என்று இதுவரை தெரியவில்லை. தமிழகத்தில் தொடர்ந்து மக்களால் ஒரு கட்சி புறக்கணிக்கப்பட்டு வருகிறது படுதோல்வி அடைந்து வருகிறது என்றால் அது பாஜக மட்டும்தான் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

மேலும் தான் தமிழனாக இருந்தாலும் காவிரி நீர் விவகாரத்தில் தனது ஆதரவு கர்நாடகாவிற்கு மட்டும்தான் என்று அண்ணாமலை பேசி ஆதாரத்தை காட்டினால் அரசியலை விட்டு விலக தயாரா என்று செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். இவர் இவ்வாறு பேசியுள்ளது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.