இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையேயான T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக கோப்பையை தட்டிச் சென்றது.

இந்த போட்டியில் விராட் கோலி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய விராட், இதுதான் இந்திய அணிக்காக என்னுடைய கடைசி டி20 உலகக்கோப்பை போட்டி. அடுத்த தலைமுறை வீரர்கள் அணியை எடுத்து செல்ல வேண்டிய நேரம் இது என்று உணர்ச்சிவசப்பட கூறியுள்ளார்.