பழம்பெரும் இந்திய கால்பந்து வீரர் பூபிந்தர் சிங் ராவத் (85) காலமானார். உடல் நலக்குறைவால் இவர் உயிரிழந்ததை அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இவர் 1960 மற்றும் 1970களில் ஃபாஸ் விங்கிராக அறியப்பட்டார். 1969 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற மெர்டேகா போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். மிகவும் பிரபலமான கால்பந்து வீரரான இவருடைய மறைவுக்கு கால்பந்து வீரர்கள் அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.