நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி சண்முகம் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு மத்திய உள்விவகார துணை இணை மந்திரி நித்தியானந்த ராய் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி வரை மத்திய ஆயுத போலீஸ் படை மற்றும் அசாம் ரைபிள் படையில் மொத்தம் 84 106 காலி  இடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்ச்சியான முறையில் நிரப்பப்படும் என்றார். இதைத்தொடர்ந்து மத்திய பணியாளர் தேர்வாணையம், SSC  போன்ற வேலை வாய்ப்புகள் வழியே இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறினார்.

இதையடுத்து 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை மொத்தம் 67,345 பேர் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவித்தார். மேலும் EX அக்னிவீரர்களுக்கு 10% காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட உள்ளதாகவும் கூறினார். இதன்படி கான்ஸ்டபிள் மற்றும் ரைபிள்மேன் பகுதிகளில் அவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் அதிக வயது வரம்பில் இருந்து தளர்வு  பெறவும் மற்றும் உடல்தகுதி தேர்வில் இருந்து விலக்களிக்கவும் தற்காலிக பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.