அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற்ற நிலையில் இறுதிப்போட்டி பார்படாசில் நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. இந்நிலையில் இறுதிப் போட்டி நடைபெற்று 2 நாட்கள் ஆகியும் இந்திய அணியினர் நாடு திரும்பவில்லை. இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது போட்டி முடிவடைந்த நிலையில் பார்படாஸ் தீவை புயல் தாக்கியுள்ளது. இதனால் அந்த தீவு முடங்கியுள்ள நிலையில் மோசமான வானிலை காரணமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் இந்திய வீரர்கள் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இந்திய வீரர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விமான நிலையம் திறக்கப்பட்ட பிறகு தனி விமானம் மூலம் இந்திய வீரர்கள் நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் இந்தியா திரும்பிய பிறகு பிசிசிஐ சார்பில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.