
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதியாக இருந்தது. பெண்கள் வாழும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது. இப்போது தமிழ்நாடு காவல்துறையில் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை.
போதைப் பொருள், நடமாட்டம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலை, கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது என குற்றம் சாட்டினர். அதற்கு பதிலளிக்கும் விதமாகமுதல்வர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, திமுக ஆட்சியில் எந்த வழக்காக இருந்தாலும் உடனே வழக்கு பதிவு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சிறப்பான ஆட்சியை எதிர்க்கட்சித் தலைவர் குறை சொல்வது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை. கடந்த நான்கு ஆண்டுகளில் குற்றங்கள் குறைந்துள்ளது. காவல் நிலைய மரணங்கள் இல்லை அதிமுக ஆட்சியில் அவலங்களை மக்கள் கண்ணீருடன் புலம்புகிறார்கள்.
திமுக ஆட்சியில் 3640 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குறுகிய காலத்தில் 2.5 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கண்காணிப்பு கேமரா மட்டும் தான் வைத்தார்கள். திமுக ஆட்சியில் கண்காணிப்பு கேமராக்களை பராமரித்து சரியாக செயல்பாட்டில் வைத்துள்ளோம்.
கொலை வழக்கில் 95.2 சதவீதம் கொள்ளை வழக்கில் 98.4 சதவீதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. 1589 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி தான் சாட்சி.
அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி. சாமானிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சாத்தான்குளமே சாட்சி. துயரமான ஆட்சிக்கு தூத்துக்குடியே சாட்சி. ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்த ஆட்சி அதிமுக. சட்டம் ஒழுங்கை பற்றி பேச அதிமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது எனக் கூறியுள்ளார்.