தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2.23 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கு, ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே ஜூன் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற இயலாத ரேஷன் அட்டைதாரர்கள் ஜூலை மாதத்தில் ரேஷன் கடைகளில் பெற்று கொள்ளலாம். இதற்கு தேவையான அனைத்து துரித ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி மாவட்ட வழங்கள் அலுவலர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.