தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 18ஆம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நவம்பர் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.