ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் வருகின்ற ஜூலை 1 முதல் சில குறிப்பிட்ட செய்திகள் மூலமாக பில் செலுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30-ம் தேதிக்கு பின்னர் அனைத்து கிரெடிட் கார்டு பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் அதாவது பிபிபிஎஸ் மூலம் செலுத்தப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

போன் பே, cred, BillDesk, Infibeam Avenues ஆகிய நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றியுள்ளன. இதனால் இந்த விதிமுறைகளை பின்பற்றாத வங்கிகளின் கிரெடிட் கார்டுக்கு கட்டணத்தை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எச்டிஎப்சி, ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் உள்ளிட்ட வங்கிகளில் செயலிகளில் இருந்து பில் செலுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது