கோவை ரேஸ் கோர்ஸில் உள்ள அரசு விருதுநகர் மாளிகையில் பால்வளத்துறை அதிகாரிகளோடு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாதுகாப்பு தங்கராஜ் கலந்து கொண்டு பேசினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த இவர், ஆவின் பாலில் விற்பனை 25% அதிகரித்துள்ளது. கிடாரி கன்றுகளை ஈனும் சினை ஊசி ஆரோக்கியமான பழக்கம் என்று நான் சொல்ல மாட்டேன். மேலை நாடுகளில் ஒரு மாடு 32 லிட்டர் பால் தரும் நிலையில் நம்முடைய நாட்டு மாடுகள் 5 முதல் 6 லிட்டர் கொடுக்கிறது.

இதை 10 முதல் 15 லிட்டராக உயர்த்தினால் விவசாயிகளுக்கு அதிக அளவில் பலன் கிடைக்கும். அதற்காகத்தான் நாட்டினங்களை கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறோம். ஆவின் கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள்,   திருநங்கைகளுக்கு வாய்ப்பினை அளிக்க இருப்பதாக கூறியுள்ளார்.