தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் கார்மேகம் அறிவித்துள்ளார். மூணு நாளை முதலாம் ஆண்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வுகளை ஒரே நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உத்தேச அட்டவணையை வெளியிட்டுள்ள இயக்ககம், செமஸ்டர் தேர்வுகளை வருகின்ற நவம்பர் மாதம் 4 முதல் நவம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் தேர்வு முடிவுகள் டிசம்பர் 21ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.