வரும் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் தொடங்கப்படும் என்றும் அதே நேரத்தில் தேர்வு முடிவுகளும் ஒரே நேரத்தில் வெளியாகும் என்றும் கல்லூரி கல்வி இயக்குனர் கார்மேகம் அறிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை மூன்றாம் தேதி வகுப்புகள் தொடங்கும் எனவும் செமஸ்டர் தேர்வுகள் வரும் அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கி நவம்பர் 25ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.