
இந்தியாவிலுள்ள 10 நுகர்வோரில் 9 பேர் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சார்ஜிங் கேபிள்களை ஒரே மாதிரியானதாக மாற்றும் அரசின் நடவடிக்கையை ஆதரிக்கின்றனர். வருகிற 2025 மார்ச் மாதத்திற்குள் மின்னணு தயாரிப்புகளுக்குரிய நிலையான சார்ஜிங் போர்ட்டாக USB Type-C கேபிளை பின்பற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. வெவ்வேறு சாதனங்களுக்குரிய வெவ்வேறு சார்ஜர்கள் என்பது நிறுவனங்கள் அதிக பாகங்கள் விற்க உதவுகிறது என்று 10 நுகர்வோரில் 7 பேர் நம்புகிறார்கள்.
வெவ்வேறு ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் நிறுவனத்தை பொருட்படுத்தாமல் வேறு சார்ஜிங் கேபிள்களை கொண்டிருக்கும் தற்போதைய அமைப்பு நன்றாக உள்ளதாக 6% நுகர்வோர் மட்டுமே கூறி உள்ளனர். உற்பத்தியாகும் மின் கழிவுகளின் அளவை குறைக்க ஒவ்வொரு வீட்டிற்கும் சார்ஜர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் (2025 ஜூன் மாதத்திற்குள்) செய்ததை போன்று, பொதுவான சார்ஜிங் போர்ட் குறித்த நுகர்வோர் விவகாரக் குழுவின் பரிந்துரைகளை இந்தியா விரைவில் ஏற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது. நிறுவனங்களால் செய்யப்பட்ட சார்ஜிங் கேபிள்கள் அதிகமான விலையில் உள்ளதால், பெரும்பான்மையானவர்கள் பொதுவான பதிப்புகளை வாங்குகின்றனர்.