உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஆரம்பித்த பிறகு டெஸ்ட் கிரிக்கெட் மீண்டும் பிரபலமானதாக மாறிவிட்டது. சமீபத்தில் கூட ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் முதல் இரண்டு இன்னிங்ஸ்களையும் மிக முக்கியமானதாக மாற்ற ஐசிசி ஒரு விதிமுறையை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விதிமுறையால் இனி டிரா இருக்க வாய்ப்பில்லை என தெரிகிறது. டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரையில் சமீப காலமாக டிரா ஆவது மிகவும் குறைந்து விட்டது.

வெற்றி மற்றும் தோல்விகள் தான் அதிகமாக இருக்கும் நிலையில் டிரா என்ற நிலையை முற்றிலும் நீக்க ஐசிசி முடிவு செய்துள்ளது. அதாவது ஒரு போட்டி டிரா ஆகும் பட்சத்தில் இரண்டு இன்னிங்ஸ் முடிவில் எந்த அணி முன்னிலை பெற்றதோ அந்த அணியை வெற்றி பெற்றதாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மழையால் பாதிக்கப்படும் ஆட்டத்திற்கு மட்டும் இதனை சோதனை முறையில் அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027 தொடரில் இருந்தே இதனை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.