தீபாவளி என்பது இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகையாகும். நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணம் செய்வார்கள். அவர்களுக்கு வசதியாக வருடம் தோறும் பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது . அப்படி இந்த வருடத்திற்கு சென்னையில் இருந்து புறப்படும் ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை முதலே தொடங்கியது. ஆனால் முன்பதிவான சில நிமிடங்களிலேயே முடிந்து விட்டது.

இந்த நிலையில் அக்டோபர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளுக்கான ரயில் டிக்கெட்டுகளுக்கு கடந்த இரண்டு நாட்களாக முன்பதிவு நடைபெற்றது. டிக்கெட்டுகள் முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது. இதனைத் தொடர்ந்து இன்று அக்டோபர் 30-ஆம் தேதிக்கான முன்பதிவு தொடங்குகிறது. இன்று கடைசி நாள் என்பதால் டிக்கெட் புக் செய்பவர்கள் தயாராக இருங்கள்.