கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மடத்துவிளை பகுதியில் ராஜா விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியில் வசிக்கும் குமார், ஆஷிக், ஆஷிப், விஜயகுமார், ஷகீலா ஆகிய 5 பேரும் பயங்கர ஆயுதங்களுடன் ராஜா வீட்டு பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

இதனையடுத்து அவர்கள் ராஜாவை சரமாரியாக தாக்கிவிட்டு வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் காயமடைந்த ராஜா தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ராஜா மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குமார் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.