திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் பகுதியில் வசிக்கும் 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பேருந்து மூலம் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 30 வெட்டு பகுதி அருகே டீ குடிப்பதற்காக பேருந்து சாலையோரம் நின்றது. அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பி பெருந்தன் மீது உரசியதாக தெரிகிறது. இதனால் பேருந்து முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. முதலில் அகல்யா(20) என்ற இளம்பெண் கீழே இறங்குவதற்காக கம்பியை பிடித்துள்ளார். அவர் காலணி அணியவில்லை.

அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனே அகல்யா கம்பியில் கை வைக்காதீங்க என கூச்சலிட்டு கொண்டே கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கம்பியை தொடாமல் அகல்யாவை வீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அகல்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.