கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத். இவர் தன்னுடைய நண்பர்களோடு கர்நாடகாவில் உள்ள மருத்துவமனைக்கு கூகுள் மேப் உதவியுடன் சென்றுள்ளார். அப்போது கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருவதால் அந்த பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இது தெரியாமல் சென்ற அப்துல் ரஷீத் சாலை என்று நினைத்து காரை ஓட்டியதால் தண்ணீரில் கார் இழுத்து செல்லப்பட்டுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக அங்குள்ள ஒரு மரத்தில் கார் சிக்கிக் கொண்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் வெளியேறி தீயணைப்புத் துறையினருக்கு செல்போன் மூலமாக தகவல் கொடுத்து தப்பித்துள்ளனர்.