திண்டுக்கல் மாவட்டம் காவிரி செட்டிப்பட்டியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சித் குமார் என்ற மகன் இருந்துள்ளார். ரஞ்சித் குமார் சண்டை சேவலை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் பந்தய சேவலை மாற்று இடத்தில் கட்டியது தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி இருவரும் பயங்கரமாக தாக்கி கொண்டனர்.

அப்போது கோபத்தில் முனியாண்டி தனது மகன் ரஞ்சித்தை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதனால் ரத்த வெள்ளத்தில் ரஞ்சித் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று ரஞ்சித் குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முனியாண்டிய கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.