மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் 34 வயதான தன்னுடைய கணவர் தான் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு கட்டாயப்படுத்தி ஈடுபட்டார். மேலும் தன்னுடைய மாமனார் என்னை தகாத முறையில் தொட்டு துன்புறுத்தினார்.

கணவருடைய குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்களும் அடித்து துன்புறுத்தினார்கள். எனவே மன ரீதியாக துன்புறுத்திய அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த ஆறு பேர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.