
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ஒரு மூதாட்டி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த மூதாட்டியின் உடலுக்கு அருகே இரண்டு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளியான முத்து என்பவர் அமர்ந்திருந்தார். அதை பார்த்த மூதாட்டியின் உறவினர்கள் அவர்தான் லட்சுமி கொலை செய்ததாக கருதி அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதற்கிடையே போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் முத்துவிடம் விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
லட்சுமி அந்த பகுதியில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். மாற்றுத்திறனாளி முத்துவும் மூதாட்டியும் இரவு ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அதன் பிறகு இருவரும் இரண்டு முறை உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் மூன்றாவது முறை மூதாட்டிவுடன் உறவு கொள்ள சென்றபோது அவர் உடல் அசைவின்றி கிடந்ததை கண்டு முத்து அதிர்ச்சி அடைந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். மூதாட்டியின் உடலில் எந்தவித காயங்களும் இல்லை. அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.