![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/07/a11a9c94-61c3-4d83-adef-97582f0e8295.jpg)
இந்தியாவில் பண பரிவர்த்தனையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் பேடிஎம் தனிநபர் கடன்களை வழங்கி வருகின்றது. Paytm செயலியில் மொபைல் எண்ணை உள்ளீடு செய்து கணக்கை உருவாக்கி உள்நுழைய வேண்டும். அங்கு personal loan என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்த பிறகு கேட்கப்படும் தரவுகளை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
பிறகு பான் கார்டு மற்றும் சிபில் ஸ்கோர் ஆகியவற்றை சரிபார்த்த பிறகு லோன் உங்களுக்கு வழங்கப்படும். திருப்பி செலுத்த வேண்டிய தொகையை நாம் முடிவு செய்து கொள்ள முடியும். வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் வாடிக்கையாளர்கள் சேவை கிடைக்கும். ஆதித்யா பிர்லா நிறுவனம் மூலமாக இந்த கடன் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.