கடலூர் மாவட்டம் எம்.புதூரில் அதிமுக கிளை செயலாளரான நேரு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி எம்.புதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர்.

இந்த நிலையில் நேரு தனது முந்திரி தோப்பில் முந்திரி கொட்டைகள் எடுப்பதற்காக நாகியநத்தம் பகுதியைச் சேர்ந்த கல்பனா(25), சரண்யா(25) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து எதிரே வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கல்பனாவும், சரண்யாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நேருவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம இடத்திற்கு சென்று சரண்யா, கல்பனா ஆகியோரின் உடல்களை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.