நடப்பு டி20 உலகக்கோப்பையின் இறுதி போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோத இருக்கிறது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி கோப்பையை வெல்லும் உத்வேகத்தில் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் இதுவரை நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் தோல்வியை சந்திக்கவில்லை. இதனால் நாளை நிச்சயம் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்கள் மத்தியில் பெருமளவு இருக்கிறது.

அதன் பிறகு முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்க அணியும் கோப்பையை வெல்லும் உத்வேகத்தில் விளையாடும் என்பதால் நாளை நடைபெறும் போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறிய நிலையில் அதை நினைத்து கேப்டன் ரோகித் சர்மா ஆனந்த கண்ணீர் வடித்தார். அப்போது விராட் கோலி ரோஹித்தின் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.