பறவையின் கழிவுகள் நிறைந்த கூடுகளை வைத்து தயாரிக்கப்படும் சூப்பை சுவைப்பதற்கு சீன மக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த சூப்பானது சருமத்தின் பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும், வயதான தோற்றத்தை கட்டுப்படுத்த உதவும் என சீன பாரம்பரிய மருத்துவ குறிப்புகளில் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது  இணையதள ஆதிக்கத்தால், பறவை கழிவு சூப், உலகம் முழுவதும் அறியப்பட்டு, எல்லோருடைய  கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 500கிராம் உலர்ந்த பறவை கூட்டின் விலையானது ரூ.1.6 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.