கர்நாடக மாநிலம் மைசூரில் சாம்ராஜ் தொகுதி உள்ளது. இங்கு எம்எல்ஏவாக ஹரிஷ் கவுடா (51) இருக்கிறார். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் கடந்த மாதம் பெங்களூரு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் நான் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது பெண் ஒருவர் அங்கு வந்தார். அவர் என்னிடம் ஏதேதோ பேசி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் என்னுடைய செல்போனுக்கு 2 பேர் தொடர்பு கொண்டு நீங்களும் அந்தப் பெண்ணும் ஹோட்டலில் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் எங்களிடம் உள்ளது.

எனவே நீங்கள் எங்களுக்கு பணம் தராவிட்டால் அந்த போட்டோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவோம் என மிரட்டுவதாக கொடுத்திருந்தார். இந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது அவரை மிரட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அதன்படி சந்தோஷ் மற்றும் புட்டராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.