சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவருடைய மகன் நிதிஷ். 24 வயதான இவரை நேற்று இரவு ஆறு பேர் கொண்ட கும்பல் சராசரியாக அறிவாளால் வெட்டிவிட்டு சென்றது. இதில் பலத்த காயமடைந்த நிதிஷ் அங்கேயே சரிந்து விழுந்தார். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிவகங்கை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறனர். இதுகுறித்து முதற்கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.