தமிழகத்தில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நடைமுறையை சென்னை உயர்நீதிமன்றம் அமல்படுத்த உத்தரவு பிறப்பித்தது. இந்த நடைமுறை கடந்த மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை மட்டுமே இருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 30ம் தேதி வரை இ-பாஸ் நடைமுறை நீட்டிக்கப்படுவதாகவும் இ-பாஸ் முறை குறித்து நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்யவும் சிறப்பு அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் இ.பாஸ் முறையை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கலாம் என்றும் அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.