
ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 40,000 பேர் ஈரோடு கிழக்கு தொகுதியை சேர்ந்தவர்கள் அல்ல எனவும் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் முறைகேடுகள் தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.