தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அமலுக்கு வந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.6 கோடி மகளிருக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் விண்ணப்பித்த பலருக்கும் பல காரணங்களால் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது குறித்து மேல்முறையீடு செய்து உரிமை தொகை பெறலாம் அல்லது நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மகளின் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கான உதவி மையம் இன்று செப்டம்பர் 19ஆம் தேதி முதல் செயல்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலமாக குடும்பத் தலைவிகள் விண்ணப்பம் நிராகரிப்பு மற்றும் மீண்டும் விண்ணப்ப பதிவு தொடர்பான சந்தேகங்களை கேட்டறிந்து அதற்கு தீர்வு காணலாம் எனவும் அதே சமயம் ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பணம் வந்தடையாமல் இருப்பது குறித்தும் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.