
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த 21ஆம் தேதி சிறுமியின் தாய் வேலைக்கு சென்று விட்ட நிலையில் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாய் வீட்டிற்கு வந்த பிறகு வீட்டிற்கு சிலர் வந்து விட்டு சென்றதாக அக்கம் பக்கத்தினர் கூறியதோடு அது பற்றி சிறுமியிடம் விசாரிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
அப்போது அந்த சிறுமி தன்னை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். அதாவது சின்னதம்பி (70), பன்னீர்செல்வம்(76), ராஜேந்திரன் (60) ஆகிய 3 முதியவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி ஜெயங்கொண்டம் மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் முதியவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.