
அமெரிக்காவில் உணவில் நிறம், சுவை மற்றும் காலாவதி அதிகரிக்கும் ரசாயனங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது .இந்த உத்தரவு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த ரசாயனங்களின் பயன்பட்டால் மாரடைப்பு, உடல் வலிமை இழப்பு போன்ற கடுமையான உடல் நல கோளாறுகள் ஏற்படக்கூடும் என்று அந்நாட்டு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பயன்படுத்தப்படும் உணவு சேர்க்கை நிறமிகள் உடல் நலத்திற்கு கேடு விளைவி ப்பதாக அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது . இதனால் பல உணவு பொருட்கள் தயாரிப்புக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.