சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன்  டாஸ்மாக்கில் உள்ள சரக்கில் கிக் இல்லை என்று  நக்கலாக பேசியிருந்தார். இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர்,  டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் சொன்னது உண்மைதான். அவர் பேசியது ட்ரோல் செய்தாலும் அவர்களுடைய ஆட்சியில் நடந்த தவறை அவரை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் நான் கள்ளக்குறிச்சிக்கு சென்ற போது டாஸ்மாக் மதுவின் தரம் தண்ணீரை போன்று இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தார்கள் . மதுவுக்கு அடிமையானவர்கள் தங்களுக்கு அந்த கிக் கிடைக்கவில்லை என்பதற்காக கஞ்சா நோக்கி செல்கிறார்கள். இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பு என்று கூறியுள்ளார்.