
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பரமநத்தம் கிராமத்தில் கொளஞ்சி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரத்குமார் என்ற மகன் உள்ளார். இவர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். மேலும் சரத்குமார் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். இந்த நிலையில் கொளஞ்சி தனது மகனிடம் காலை முதல் மாலை வரை குடித்தால் உனக்கு யார் பெண் தருவார்கள் என கேட்டுள்ளார். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கோபம் அடைந்த கொளஞ்சி தனது மகனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சரத்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சரத்குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த கொளஞ்சியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.