திருப்பத்தூர் மாவட்டம் மேற்கத்தியனூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. 35 வயதான இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இந்நினையில் இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக 11 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். பிறகு அந்த சிறுமியிடம் நைசாக பேசி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனை அடுத்து அந்த சிறுமி தன்னுடைய பெற்றோருடன் இந்த சம்பவம் குறித்து கூறியதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனே இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்துள்ளனர்.