
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசத்திரம் பகுதியில் அகமது கபீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் இருந்துள்ளனர். அதில் மூன்றாவது மகன் இர்ஷாத் (16) மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இன்று காலை தேர்வுக்காக மாடியில் படித்துக் கொண்டிருந்த இர்ஷாத் நீண்ட நேரம் ஆகியும் கீழே வரவில்லை. இதனால் மாடிக்கு சென்று பார்த்த இர்ஷாத்தின் அண்ணன் தனது தம்பி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே குடும்பத்தினர் இர்ஷாத்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இர்ஷாத் ஏற்கனவே இவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்தி விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. விடுமுறை தினத்தில் தேர்வுக்கு படிக்காமல் இர்ஷாத் செல்போனை உபயோகப்படுத்தி நேரத்தை செலவிட்டுள்ளார். இதனால் பெற்றோர் கண்டித்தனர். எனவே மன உளைச்சலில் இர்ஷாத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.