2024 டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை இந்திய ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். இந்த போட்டியில் கடைசி ஓவரில் சூரியகுமார் யாதவ் பிடித்த கேட்ச்சால் இந்திய அணி வெற்றி என்பது உறுதியானது.

பவுண்டரி எல்லைக்கு அருகே சென்ற பந்தை லாவகமாக பிடித்து அனைவரையும் சூர்யகுமார் யாதவ், வியக்க வைத்தார். இந்த நிலையில் உலகக்கோப்பை டிராபியை தங்கள் தலைக்கு அருகே வைத்தபடி சூர்யகுமார் யாதவ்வும் அவருடைய மனைவி தேவிஷாவும் வீட்டில் உறங்கினர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.