
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோண்டா பகுதியில் நேற்று மதியம் சண்டிகர்-திப்ரூகர் செல்லும் விரிவுரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சுமார் 12 பெட்டிகள் வரை தடம்புரண்ட நிலையில் மீட்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து மீண்டும் ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய ரயில்வே அமைச்சகம் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் நிவாரணமும் சிறுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.