கரூர் மாவட்டம் சடையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. விவசாய கூலி தொழிலாளியான சுப்பிரமணியின் இளைய மகன் அருண்குமார் தொட்டியம் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இருந்து அருண்குமாரை காணவில்லை. இதனால் குடும்பத்தினர் அருண்குமாரை தேடி அலைந்தனர். அப்போது சுப்பிரமணியின் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் அருண்குமாரின் காலனிகள் கிடப்பதாக தகவல் வந்தது.

இதுகுறித்து அறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று அருண்குமார் தேட ஆரம்பித்தனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அருண்குமாரின் சடலம் மீட்கப்பட்டது. பின்னர் போலீசார் அருண் குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.