விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சண்டிசாட்சி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். அவரது மகள் தீபிகா(12). அவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீபிகா செஞ்சியை நோக்கி செல்லும் சாலையோரமாக நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சாலையில் வந்த கார் எதிர்பாராத விதமாக தீபிகாவின் மீது மோதியது.

இதனால் படுகாயம் அடைந்த தீபிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீபிகாவின் உடலை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபிகாவின் இழப்பு அவரது குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.