திருவாரூர் மாவட்டம் பிச்சைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சத்ய சாய்(15) பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று சத்யசாய் தனது நண்பர்களுடன் அருகே இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக சென்ற போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சிடைந்த அக்கம் பக்கத்தினர் சத்ய சாயை மீட்க முயற்சி செய்தனர். ஆனாலும் அவரை மீட்க முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சத்யசாயின் உடலை மீட்டனர்.

பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.