கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வெள்ளியங்கால் ஓடையில் குளிக்க சென்ற மூன்று சில்வர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜாகிர் உசேன் நகர் வடக்கு கொளக்குடியைச் சேர்ந்த உபயத்துல்லா, முகமது அபில், முகமது பாசிக் ஆகிய மூன்று பேரும் ஓடைக்கு குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.