கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை பெடோலி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் போபண்ணா மற்றும் ஷில்பா. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு காரணமாக காரணமா பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையில் இருவரும் விவாகரத்து செய்ய விரும்பினர்.

இந்த நிலையில், தன்னுடைய கண்முன்னே மனைவி போனில் மற்றவர்களிடம் பேசுவதை கணவர் போபண்ணாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனை அவர் ஆத்திரத்தில் நேற்று ஷில்பாவை சுட்டுக் கொன்று விட்டு பின்னர் போலீசில் சென்று சரணடைந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.